பன்றிக் காய்ச்சல்-மேலும் ஒரு கர்ப்பிணி பெண் அனுமதி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
சுரண்டை அருகே உள்ள காடுவெட்டியை சேர்ந்த வனஜா என்ற கர்ப்பிணி பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏர்வாடியை சேர்ந்த ஆறுமுகநயினார் மனைவி ராஜசுதா பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்டுள்ளார். 9 மாத கர்ப்பிணியான இவர் கடந்த ஒருவாரம் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பன்றி காய்ச்சல் அறிகுறி காரணமாக அரசு மருத்துவ கல்லூரி மரு்த்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது சளி, ரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications