கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு-மேட்டூருக்கு நாளை வந்து சேரும்
சென்னை: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து கர்நாடக அரசு 20 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது. இந்தத் தண்ணீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும்.
தென் மேற்குப் பருவ மழை காரணமாக கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக காவிரியின் குறுக்கே உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கபினியிலிருந்து விநாடிக்கு 16,000 கன அடி நீரும், கிருஷ்ணராஜசாகரிலிருந்து கிட்டத்தட்ட 4 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும்.
இந்த நீரின் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு சமீபத்தில்தான் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
காவிரி நதி நீர் ஆணைய இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் அதை கர்நாடகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் தற்போது 82.27 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 4,608 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு:
இந் நிலையில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து மண்டியா மாவட்டம் இன்டவாலு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோஷம் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
அதே போல போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கூறுகையி்ல், அணை இன்னும் நிரம்பவே இல்லை. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. பருவமழை எந்த அளவுக்கு பெய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் பிறகு தான் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்றார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications