காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 100 கோடி நன்கொடை தர பிசிசிஐ மறுப்பு
மும்பை: டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு ரூ. 100 கோடி நன்கொடை தருமாறு கேட்டிருந்த காமன்வெல்த் போட்டி குழுவின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது.
காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னணி பங்குதாரராக இருக்குமாறும், ரூ. 100 கோடியை நன்கொடையாக தருமாறும் காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு கிரிக்கெட் வாரியத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலைக்குழு இன்று கூடி ஆலோசித்தது. பின்னர் இந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்தது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் கூறுகையில், அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 100 கோடி நன்கொடை வழங்குமாறு போட்டிக் குழு கோரிக்கை விடுத்திருந்தது.
இதை ஏற்க இயலாத நிலையில் இருப்பதாக நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதேபோல ஐசிசியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆலன் ஐசக்குக்கு ஆதரவு அளிப்பது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
காமன்வெல்த் போட்டி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது. கட்டுமானத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் தாமதம், நிதி முறைகேடு என சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது ரூ. 100 கோடி நன்கொடை தர முடியாது என கிரிக்கெட் வாரியம் மூஞ்சியில் அடித்தது போல கூறி விட்டது.












Click it and Unblock the Notifications