பேராசிரியருக்கு எதிராக திரண்ட பாலிடெக்னிக் மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் பேராசிரியரை கண்டித்து ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
நெல்லை அருகே கொந்காந்தன் பாறை பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்காக ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் இயங்கி வருகிறது. இதில் சுமார் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், விடுதி வசதிகள் ஏற்படுத்திடவும், ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் வலியுறுத்தி நேற்று காலை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
பின்னர் இவர்கள் கல்லூரி முன்பு திரண்டு இந்திய மாணவர் சங்கம் மாநகர செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் கோஷமிட்டனர். இதனையறிந்து அங்கு வந்த பாலிடெக்னிக் முதல்வர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.












Click it and Unblock the Notifications