என்னைக் கொல்ல தற்கொலைப் படைகளை அமைக்கிறது சிபிஎம்-மமதா புகார்

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து நச்சரித்து வரும் மமதா பானர்ஜி சிபிஎம்முக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் கூறி வருகிறார். இந்த நிலையில் தன்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்கொலைப் படைகளை அமைத்து வருவதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்து விட்டனர். இதற்காக அவர்கள் தற்கொலைப் படைகளையும் அமைத்து வருகிறார்கள்.
திரினமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது சிபிஎம் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல்களை ஏவியுள்ளனர். எங்களது கட்சியினரைக் கொன்று அவர்களுக்குப் பக்கத்தில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களைப் போட்டு மாவோயிஸ்டுகளைக் கொன்று விட்டதாக கூறிக் கொள்கின்றனர்.
எனக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்தவர்களும் ரகசியக் கூட்டம் போட்டு என்னைத் தீர்த்துக் கட்டுவது குறித்து ஆலோசித்துள்ளனர். இந்தக் கூட்டம் நடந்தது உண்மை. இதை விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கூட்டத்தில்தான் என்னை தற்கொலைப் படை மூலம் தீர்த்துக் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து விடலாம் எனவும் உறுதி கூறப்பட்டுள்ளது. எவ்வளவு செலவானாலும் என்னைத் தீர்த்துக் கட்டாமல் விடக் கூடாது எனவும் பேசப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசுக்கும் இந்த சதியில் உடன்பாடு இருப்பதாகஅறிகிறேன்.
எனது அசைவுகளை சிபிஎம் அமைச்சர்களும்,தலைவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனது நடமாட்டத்தை வேவு பார்த்து வருகின்றனர். என்னைக் கொல்லஅவர்கள் திட்டமிட்டு விட்டனர். இதுதான் நியாயமான அரசியலா? என்னை அவர்களால் அரசியல் ரீதியாக சந்திக்க முடியவில்லை. அவர்கள் கோழைகள்
என்னை மட்டுமல்லாமல், திரினமூல் இளைஞர் காங்கிரஸ்தலைவர் சுபந்து அதிகாரியையும் தற்கொலைப் படை மூலம் தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளனர். இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும் என்றால், மேற்கு மிதினாப்பூரில் தேவையில்லாமல் தங்களது கட்சியினரை ஆயுதங்களுடன் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இது வேறு எதற்காகவும் இல்லை. என்னைக் கொல்லத்தான்.
ஆகஸ்ட் 9ம் தேதி நான் லால்கர் செல்லவுள்ளேன். இந்தப் பயணத்தை அவர்கள் விரும்பவில்லை. ஆனாலும் நான் போவேன். அங்கு எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மேற்கு வங்க மாநில அரசுதான் காரணம்.
அங்கு 144 தடை உத்தரவு இருப்பதாக மேற்கு வங்க அரசு கூறுகிறது. ஆனால், அவர்களது கட்சியினர் மட்டும் தாராளமாக சென்று வருகின்றனர். நான் போகக் கூடாதா. அங்கு போவனது எனது ஜனநாயக உரிமை. நான் கண்டிப்பாக போவேன்.
இந்த அரசு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் காணாமல் போய் விடும். அதுவரை மக்கள் சற்று பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் மமதா.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications