For Daily Alerts
Just In
மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்தது!
சென்னை: ஏழு வருடங்களுக்குப் பிறகு ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ. 3.10 உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியது. இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றி்ன் விலைகள் உடனடியாக உயர்ந்தன.
இந் நிலையில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ. 8.40க்கு விற்கப்பட்டு வந்தது. இந் நிலையில் தற்போது சென்னை ரேஷன் கடைகளில் இதன் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்தப்பட்டு ரூ.11.50க்கு விற்கப்படுகிறது.
மத்திய அரசு நிர்ணயித்தபடியே விலை உயர்த்தப்பட்டு்ள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 வருடங்களுக்கு பின் மண்ணெண்ணெய் விலை இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, August 3, 2010, 15:36 [IST]