For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை பசி, பட்டினி இல்லாத கருணை மாநிலமாக மாற்றுவேன்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: எனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையின் லட்சியமே, எந்தவொரு குழந்தையோ, மகளிரோ அல்லது ஆடவரோ பசியோடு படுக்கைக்கு செல்லாத அளவுக்கு கருணை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 'பசி மற்றும் வறுமை ஒழிப்பு - சர்வதேச ஆய்வுகள் - வளர்ச்சித் திட்டங்களின் முக்கியத்துவம்' குறித்த சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து, ஆராய்ச்சி நிறுவனத்தின் இருபதாவது ஆண்டறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

ஆந்திர முதல்வர் ரோசய்யா, எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர்க லந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,

சமூக வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் யாரும் பசியால் வாடக் கூடாத இடமாக தமிழ் நாட்டை மாற்றுவதையே எனது லட்சியமாக கொண்டுள்ளேன்.

எனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையின் லட்சியமே, எந்தவொரு குழந்தையோ, மகளிரோ அல்லது ஆடவரோ பசியோடு படுக்கைக்கு செல்லாத அளவுக்கு கருணை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.

இதில் நாங்கள் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளோம். அதே போல் ஊட்டச்சத்து இல்லாமல் எந்த குழந்தையும், உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிக்க கூடாது என்பதிலும் உத்தரவாதம் அளிக்க உறுதி பூண்டுள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X