காமன்வெல்த் போட்டி-சுரேஷ் கல்மாடிக்கு காமன்வெல்த் கழக தலைவர் கெடு
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஆகஸ்ட் 18-19 ஆகிய தேதிகளில் நான் டெல்லி வரவுள்ளேன். அதற்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்து விடுமாறு சுரேஷ் கல்மாடி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அனைத்து போட்டி நடக்கும் இடங்களையும் அதற்குள் உரிய முறையில் பெற்று விட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளேன். எந்தப் பிரச்சினையும் அப்போது இருக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக தெரிவித்துள்ளேன்.
மேலும் அனைத்து மைதானங்களும் முழுத் தகுதியுடன் உள்ளன என்பதையும் உறுதி செய்யும் சான்றிதழ்களைப் பெற்று விட வேண்டும் என்றும் கல்மாடிக்குக் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் பென்னல்.
போட்டி நடக்கவுள்ள பல ஸ்டேடியங்கள் இன்னும் முழு அளவில் தயாராகாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.