ஒரே வாரத்தில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 83 பேர் பலி
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் பன்றிக் காய்ச்சல் பீதியில் அல்லாடினர். அனைத்து மாநிலங்களிலும் இக்காய்ச்சலால் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பிறகு பன்றிக் காய்ச்சலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது.
தற்போது மறுபடியும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 83 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
நாட்டிலேயே அதிகமாக மஹாராஸ்டிராவில் 51 பேர் பலியாகியுள்ளனர். இதை தொட்ரந்து கர்நாடகத்தில் 12 பேரும், ஆந்திராவில் 6 பேரும் பலியாகியுள்ளனர். மேலும், குஜராத்தில் 7 பேரும், மேற்கு வங்கம், கோவா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
இந்த தேதி வரை நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்களில் சுமார் 1,54,259 பேருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் 36, 240 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.