சுற்றுலா வழிகாட்டி பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு : சுற்றுலாத் துறை இயக்குனரகம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் சுற்றுலா வழிகாட்டி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டித்து சுற்றுலாத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்திலும், உள்நாட்டு பயணிகளை ஈர்ப்பதில் 3-வது இடத்திலும் உள்ளது. சுற்றுலா வழிகாட்டிகளின் தேவை அறிந்து தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறை மூலம் வழிகாட்டி பயிற்சி அளித்து வருகிறது. பயிற்சி முடித்த 300 பேருக்கு இதுவரை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது தமிழகத்திற்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பயிற்சி நடத்த சுற்றுலாத் துறை முடிவு செய்து வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவித்திருந்தது.

அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவதால் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சுற்றுலாதுறை உத்தரவிட்டுள்ளது. இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் 2 வாரம் செயல்முறை பயிற்சியும், 3 நாட்கள் களப்பயிற்சியும் வழங்கப்படும். பின்னர் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டிக்கான அடையாள அட்டை வழங்கப்படும். அதன் பிறகு விரும்புகிற இடத்தில் அவர்கள் பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+