போர்க்குற்றம் குறித்த இலங்கையின் விசாரணை தொடங்கியது

சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த குழுவில் எட்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் இதில் யாருமே அரசு சார்பற்றவர்கள் கிடையாது.
இந்தக் குழு தனது அலுவலகத்தை இன்று கொழும்பில் திறந்தது. அடுத்து ஐந்து நாட்களுக்கு இவர்கள் விசாரிக்கப் போகிறார்களாம். ஐந்து நாள் விசாரணையும் கொழும்பில் வைத்து நடைபெறுமாம். அதன் பின்னர் 2 நாட்கள் வவுனியா போய் வாக்குமூலம் பெறப் போகிறார்களாம்.
2002ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசுத் தரப்புக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏன் முறிந்தது, எதனால் போர் மூண்டது என்பது குறித்து இந்தக் குழு முக்கியமாக ஆராயவுள்ளதாம்.
இலங்கையில் மீண்டும் போர் மூளாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரைக்குமாம்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை ஐநா. அமைத்துள்ளது. ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications