For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமன்வெல்த் தடகளம்: இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்காது: மில்கா சிங்

By Chakra
Google Oneindia Tamil News

Milkha Singh
டெல்லி: டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவி்ல் இந்தியாவுக்கு ஒரு பதக்கம்கூட கிடைக்காது என்று முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கூறியுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ள விவரங்கள் வெளியாகி நாட்டையே அதிர வைத்துள்ள நிலையில் மில்கா சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம், பாக்சிங், டென்னிஸ், வில்வித்தை, டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், பேட்மின்டன் போன்ற விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதி.

அதே நேரத்தில் தடகளத்தில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் சிறந்த தடகள வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைப்பதில்லை. தடகள அணியின் பயிற்சியை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன்.

ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது. காமன்வெல்த் போட்டி முடிந்தவுடன் எனது கருத்துக்கு வரவேற்பு கிடைக்கும்.

மும்பை தாக்குதலையடுத்து பாதுகாப்பு காரணங்களை கூறி பல நாடுகள் காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகிவிட்டன. பங்கேற்கும் நாடுகளின் நட்சத்திர வீரர்கள் பலர் விலகி வருகின்றனர். இந் நிலையில், காமன்வெல்த் போட்டி ஊழல் புகாரால் இந்தியாவின் கெளரவம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் மில்கா.

1958ம் ஆண்டு கார்டிப்பி்ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 47.6 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றவர் மில்கா சிங். அவருக்கு இப்போது வயது 81 என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X