'என்கிரிப்ட்' விவகாரம்: பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு ஆக 31ம் தேதி வரை மத்திய அரசு கெடு

இந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கனடைவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இணையதள சேவை, இமெயில், குறுஞ்செய்தி, சமூக வலைதள சேவை போன்ற ஏராளமான வசதிகளை தனது செல்போனில் வழங்குகிறது.
இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை.
இதில் ஒருவர் அனுப்பும் எஸ்எம்எஸை அவர் யாருக்கு அனுப்பினாரோ அவரைத் தவிர மற்றவர்களால் இடைமறித்துப் பார்க்க முடியாது. இந்தத எஸ்எம்எஸ் 'என்க்ரிப்ட்' செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் கனடாவில் தான் உள்ளன. இதனால் பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ், மெயில் போன்றவற்றை இந்திய உளவுப் பிரிவினரால் இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது.
இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெர்ரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்ற ஏதுவாகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, பிளாக்பெர்ரி நிறுவன சேவைகளையும் தனது கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து, அதுகுறித்த விவரங்களை பிளாக்பெர்ரியிடம் கோரியது. ஆனால் இதை ஆரம்பத்தில் இந்நிறுவனம் கண்டுகொள்ளவே இல்லை.
மேலும் எங்களால் கூட ஒருவர் அனுப்பும் மெயில், எஸ்எம்எஸ்களை இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது என்று பிளாக்பெர்ரி கூறி வருகிறது. அந்த அளவுக்கு பாதுகாப்பான என்கிரிப்ட் செய்யப்படுகிறது என்று கூறுகிறது.
ஆனால், பிளாக்பெர்ரி எஸ்எம்எஸ்களை மறித்துப் படிக்க அனுமதித்திருக்காவிட்டால் இந்த நிறுவனத்தின் சேவையை ரஷ்யா, சீனாவில் அனுமதித்தே இருக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே அந்த நாட்டு அரசுகளிடம் மட்டும் பணிந்துவிட்டு இந்தியாவி்ல் மட்டும் ரூல் பேச முடியாது என்று பிளாக்பெர்ரி நிறுவனத்திடம் மத்திய அரசு கூறிவிட்டது.
இதனால் கடுப்படைந்துள்ள மத்திய அரசு பிளாக்பெர்ரிக்கு இறுதிக் கெடு விதித்துள்ளது. இதன்படி, பிளாக்பெர்ரி நிறுவனம் தமது மொபைல் சேவையை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செய்து கொடுக்காவிட்டால், அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கூகுள், ஸ்கைப்புக்கும்...
மத்திய அரசு இதே போன்ற எச்சரிக்கையை கூகுள் மற்றும் இணைய வழி தொலைபேசி சேவையான ஸ்கைப் ஆகியவற்றுக்கும் விடுத்துள்ளது. இந்த இரு நிறுவனங்களின் சேவையையும் முழுமையாகக் கண்காணிக்கும் வகையில் தொழில் நுட்ப விவரங்களை உடனடியாகத் தரவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications