'இந்தி': நாடாளுமன்றத்தில் திமுக-பாஜக மோதல், அவை ஒத்திவைப்பு
இதையடுத்து திமுக-பாஜக இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை கேள்வி நேரத்தின்போது மின்துறை இணையமைச்சர் பரத்சிங் சோலங்கி இந்தியில் பதிலளித்தார்.
ஆனால், இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை. ஆங்கிலம் அல்லது இந்தியில் உறுப்பினர்கள் பேசும்போது அது இந்தி, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும். இதை ஹெட்-செட்களி்ல் உறுப்பினர்கள் கேட்டு அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.
ஆனால், சோலங்கி இந்தியில் பேச அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. இது குறித்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரச்சனை கிளப்பினார்.
மொழி பெயர்ப்பு செய்யப்படாததை கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாகக் கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சோலங்கி, நான் ஆங்கிலத்திலேயே பதிலளி்ககிறேன் என்றார்.
ஆங்கிலத்துக்கு பாஜக எதிர்ப்பு:
ஆனால், இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அமைச்சர் இந்தியில் தான் பதிலளிக்க என்றனர்.
கேள்வியை பாஜக உறுப்பினர் இந்தியில்தான் கேட்டுள்ளார். எனவே இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து திமுக-பாஜக எம்பிக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
பின்னர் அவை கூடியதும், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்காக மீரா குமார் வருத்தம் தெரிவித்தார். சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாகவே இந்த சிக்கல் ஏற்பட்டதாகவும் தற்போது அது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் மீரா குமார் தெரிவித்தார்.