லண்டன் விழாவில் பங்கேற்க அனுமதி கோரும் சசிகலா கணவர் நடராஜன்
சென்னை: லண்டன் தமிழர் அமைப்பு வழங்கும் விருதைப் பெற்றுக் கொள்ள லண்டன் செல்ல வேண்டும். இதற்கு என்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா கணவர் நடராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாட்டு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா கணவர் ம. நடராஜன் மீது சிபிஐ கோர்ட் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நடராஜன் அப்பீல் செய்தார். அதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, நடராஜன் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கு இங்கிலாந்தில் உள்ள தமிழர் அமைப்பு ஒன்று விருது வழங்க உள்ளது. இதை பெற்றுக்கொள்ள லண்டன் செல்கிறேன்.
கார் வழக்கில் வழங்கிய தண்டனையை காட்டி எனது பாஸ்போர்ட்டை முடக்க வாய்ப்பு உள்ளது. அந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications