ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம்

ஆண்டர்சனை அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ்தான் தப்ப விட்டதாகவும், அதற்கும் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் ராஜ்யசபாவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் சிதம்பரம் கூறியதாவது:
ஆண்டர்சன் பாதுகாப்பாக அமெரிக்கா செல்ல வழி வகை செய்யப்பட்டதாக அப்போதைய வெளியுறவுத் துறை செயலராக இருந்த எம்.கே.ரஸ்கோத்ரா கூறியுள்ளார். அர்ஜுன் சிங்கும் அதையே கூறியுள்ளார். அவர்களது கூற்றை உறுதி செய்யவோ, மறுக்கவோ கூடிய நிலையில் நான் இல்லை.
காரணம், ஆண்டர்சன் தப்பிச் செல்வதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொலைபேசி மூலம் மாநில அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள் என்பதற்கும், அவர் பாதுகாப்பாக செல்வதற்கு உறுதி அளிக்கப்பட்டது என்பதற்கும் எந்த ஆவணமும் இல்லை.
ராஜீவ் காந்திக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என அர்ஜுன் சிங் கூறியுள்ளதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆண்டர்சன் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதை நெருக்குதல் என்றோ அல்லது அவர்களது கடமை என்றோ விவரிக்கலாம்.
நமது தவறுகளுக்கு அமெரிக்காவை நாம் ஏன் குறை கூற வேண்டும்?.
எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இப்போது கேட்கும் கேள்விகளை 2001ல் அவர் சட்டத் துறை அமைச்சராக இருந்தபோது கேட்டிருந்தால், என்னைவிட திறமையான உள்துறை அமைச்சர் (எல்.கே.அத்வானி) அதற்கான ஆவணங்களைத் தேடி கண்டுபிடித்து பதில் கூறியிருந்திருப்பார்.
அதைவிட்டுவிட்டு இப்போது எங்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக நாம் பல தவறுகளை செய்துள்ளோம். நாடாளுமன்றம், அதிகாரிகள், அரசியல்வர்க்கம் ஆகியவை பாதிக்கப்பட்டோரை கைவிட்டுவிட்டன. நீதிமன்றத்தின் பின்னால் நாம் ஒளிந்து கொள்ளலாம் என நாடாளுமன்றமும், அதிகாரவர்க்கமும் நினைத்துவிட்டன.
போபால் விஷவாயு நஷ்டஈடு வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1991க்கு இடையிலும், கிரிமினல் வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1996க்கு இடையிலும் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த காலகட்டத்தில் 3 பேர் பிரதமர்களாக (வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ்) இருந்தனர்.
இவர்கள் மூவருமே ஏதாவது ஒரு வகையில் இந்தப் பிரச்சனையை சரியாக கையாளாததற்கு பொறுப்பாவார்கள்.
ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் இந்திய கிளைகளை எவரெடி நிறுவனம் வாங்கிவிட்டது. சர்வதேச சொத்துகள் டெல் நிறுவனம் வாங்கிவிட்டது.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளி யார் என்பது குறித்த வழக்கு 2005 முதல் ஜபல்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பொறுப்பாளி யார் என்பது முடிவானவுடன் நஷ்டஈட்டை நாம் கோர முடியும் என்றார் ப.சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications