ஓணம் பண்டிகை: சென்னை, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
நாகர்கோவில்: மலையாளிகள் கொண்டாடும் ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை இரு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுத்துள்ளனர். குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ஓணம் பண்டிகை நாளான 23.8.10-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு ஈடாக அக்டோபர் 2-வது சனிக்கிழமை (9.10.10) மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
23.8.10-ம் தேதி மாவட்டத்திலுள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டுத் தேவையான பணியாளர்களுடன் இயங்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications