ராகுல் மகாஜனுக்கு திடீர் நெஞ்சு வலி-மருத்துவமனையில் அனுமதி
அவரை சாய்பீ மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். பின்னர் பரிசோதனைக்குப் பின்னர் அவரை அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ராகுலுக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகுலின் குடும்ப டாக்டரான சச்சின் பத்கர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே ராகுலுக்கு உடல் நலம் சரியில்லை. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தீர்மானித்தோம்.
கடந்த 2 நாட்களாக அவர் அப்செட் ஆக இருந்தார். சரியாக யாருடனும் பேசவும் இல்லை. இதனால்தான் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றார்.
சில நாட்களுக்கு முன்புதான் ராகுல் தன்னை கடுமையாக அடித்தாக சுயம்வரம் மூலம் அவர் தேடிக் கொண்ட மனைவி டிம்பி குற்றம் சாட்டி வீட்டை வெளியேறி பின்னர் திரும்பி வந்தார். இந்த சர்ச்சை ஓய்ந்த சில நாட்களில் ஒரு ஆபாச இணையதளத்தில், டிம்பி நீச்சல் உடையில் படு கவர்ச்சிகரமாக இன்னொருவருடன் இருந்த நெருக்கமான படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.