திருச்சி அருகே முயல் திருடிய போலீசார் கைது !
திருச்சி: திருச்சி அருகே முயலை திருடிய ரயில்வே போலீசாரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இனாம் கொளத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் நள்ளிரவு நேர்தில் ரயில்வே போலீஸ் பழனிச்சாமி, ரயில்வே ஊழியர் பலராமன் உட்பட 6 பேர் ஊர் மக்கள் அயர்ந்து தூங்கிய நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, திருடுவது என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் இவர்கள் திருட முயன்ற போது விழித்துக் கொண்ட அந்த வீட்டில் நபர் கூச்சல் போட அக்கம் பக்கத்து வீட்டினர் எழுந்து வந்து கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்பு, அவர்களை அந்த பகுதி எஸ்.ஐ. லதாவிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து டி.எஸ்.பி. கண்ணன் விசாரணை நடத்தியதில், அவர்கள் அந் முயல் திருட வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரும் வனத்துறை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications