காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் கமிட்டியை கண்காணிக்க கமிட்டி அமைப்பு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கண்காணிப்புக் கமிட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இப்போதைக்கு சுரேஷ் கல்மாடியை அப்படியே நீடிக்க விடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாம். மேலும், விரைவில் போட்டி தொடர்பானவற்றை கண்காணிக்க ஒரு கமிட்டியை அமைப்பது குறித்து விரைவில் பிரதமர் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் போட்டி தொடர்பான ஊழல்கள் குறித்து பிரதமருடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளாராம். விரைவில் அரசு தரப்பில் இதுதொடர்பான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications