கட்டி வைக்காவிட்டால் கொழுந்தியாள் முகத்தில் ஆசிட் வீசுவேன்-ஏட்டு அடாவடி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கொழுந்தியாளை திருமணம் செய்து வைக்காவிட்டால் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று மிரட்டிய நெல்லை ஏட்டு மீது அவரது மாமனார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நெல்லை கண்ட்ரோல் ரூமில் ஏட்டாக பணியாற்றுபவர் சுந்தரம். இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் வண்ணார்பேட்டையில் உள்ள மாமனார் வீ்ட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சுந்தரம் 2வது திருமணம் செய்ய முடிவெடுத்தார். வேறு இடத்தில் மணம் முடித்தால் குழந்தைகளை கவனிப்பதில் பிரச்சனை ஏற்படும் என கருதிய சுந்தரம் மனைவியின் தங்கையை திருமணம் செய்து தருமாறு மாமனாரிடம் கேட்டார்.

ஆனால் அவர் முடியாது என்று கூறி விட்டாராம். எப்படியாவது கொழுந்தியாளை திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த சுந்தரத்திற்கு மாமனாரின் பதில் அதிர்ச்சியை தந்தது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவிக்கு சொந்தமான நகைகளை தருமாறு கேட்டார். மாமனார் 20 பவுன் நகை கொடுத்தார். ஆனால் சுந்தரம் மேலும் 15 பவுன் நகை வேண்டுமென்றார். தனது குழந்தைகளையும் அங்கிருந்து அழைத்து வந்து விட்டார்.

தனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் கொழுந்தியாள் முகத்தில் ஆசி்ட் ஊற்றுவேன் எனவும் மிரட்டினார். இதுகுறித்து சுந்தரத்தின் மாமனார் மாநகர கமிஷனர் அபாய்குமார்சிங்கிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து இதுகுறித்து கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் பாளை இன்ஸ்பெக்டர் குருநாதன், எஸ்ஐ பழனி முருகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+