தெலுங்கானா துரோகி விஜயசாந்தி-தெலுங்கு தேச எம்.எல்.ஏ. தாக்கு

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சீதக்கா, விஜயசாந்தியை தெலுங்கானா துரோகி என்று கூறியுள்ளார்.
ஹைதராபாதில் நிருபர்களிடம் பேசிய சீதக்கா விஜயசாந்தியை காய்ச்சித் தள்ளிவிட்டார். அவர் கூறியது:
தெலுங்கானா கட்சி எம்.பி.யான நடிகை விஜயசாந்தி சமீபகாலமாக தன்னை தெலுங்கானா பெண் என்று கூறிக் கொள்கிறார். உண்மையில் அவர் கடலோர ஆந்திராவைச் சேர்ந்தவர்.
தெலுங்கானா பகுதியில் அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காகவே தன்னை தெலுங்கானா பெண் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
விஜயசாந்தியை நியாயமாக தெலுங்கானா துரோகி என்றுதான் அழைக்க வேண்டும். சினிமாவில் வேஷம் போட்டது போல அரசியலிலும் பல வேஷங்கள் போட்டு வருகிறார். ஆனால் அவை ஒன்றும் எடுபடவில்லை.
அவரும் அவரது கட்சியினரும் மக்களை ஏமாற்றம் வகையில்தான் போராடி வருகிறார்கள். தனி மாநிலம் அமைப்பதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கவில்லை. இது எங்களுக்கு நன்றாக தெரியும். விரைவில் தெலுங்கானா மக்களும் இதை புரிந்து கொள்வார்கள்..." என்றார்.












Click it and Unblock the Notifications