எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்; நடுத்தெருவே போதும்! - சிரஞ்சீவி
Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, கடப்பா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது:
"எனக்கு முதல்வர் பதவி மீது வெறி வந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அந்த பதவி மீது நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது. அதற்கான முயற்சியும் செய்ததில்லை.
ஆந்திராவை ஆளும் எந்த முதல்வரும் தவறு செய்வதை ஏற்க மாட்டேன். முதல்வர் பதவி என்பது தலைமுடிக்கு சமம். ஆந்திர அரசியலில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்களை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக போராட 'அசெம்பிளி' தேவையில்லை; எனக்கு நடுத் தெருவே போதும். மக்கள் ஆதரவு இருந்தால் போதும்.
மக்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும் படையாக பிரஜா ராஜ்யம் கட்சி பாடுபடும்..." என்றார் சிரஞ்சீவி.












Click it and Unblock the Notifications