காமன்வெல்த் விளையாட்டு பணிகளைக் கண்காணிக்க தனிக் குழு அமைப்பு
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான சர்ச்சைகள் வலுத்து வருவதைத் தொடர்ந்து, இவற்றைக் கண்காணிக்க அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
போட்டி தொடங்க 50 நாட்களே உள்ள நிலையில் இந்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, போட்டியை சிறப்பாக நடத்தத் தேவையான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் இந்தக் குழு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையைப் பெறலாம் என்றம் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமரின் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் கல்மாடியின் மோனாபாலிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் கல்மாடியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications