காஷ்மீர் சுதந்திர தினத்தில் பரபரப்பு-உமர் அப்துல்லா மீது ஷூ வீச்சு
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் உமர் அப்துல்லா. அவர் கொடியேற்ற சில விநாடிகள் இருந்தநிலையில் திடீரென உரத்த குரல் எழுப்பியபடி அந்த சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி ஷூவை கழற்றி வீசினார். ஆனால் உமர் அப்துல்லா இருந்த இடத்திற்கு முன்பாகவே அது விழுந்து விட்டது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர்.
அவர் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர். பெயர் அப்துல்லா அஹாத் ஜான். ஆனவர். இவர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் இந்த காரியத்தில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்னர் உணர் அப்துல்லா பேசுகையில், இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்தார். அவர் பேசுகையில், கற்களை வீசுவதற்குப் பதில் ஷூ வீசியது பரவாயில்லை என்று நினைக்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications