ஈரோட்டில் 8 மணி நேரம் இடைவிடாத கன மழை-மக்கள் பெரும் அவதி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனத்த மழை பெய்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஈரோட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் கன மழை பெய்யத் தொடங்கியது. நிற்காமல் தொடர்ந்து 8 மணி நேரம் பெய்த மழையால் ஈரோடு நகரமே குளுமையாக மாறிப் போனது.
இதேபோல அரச்சலூர், பூந்துறை, பவானி, அந்தியூர் மற்றும் மடக்குறிச்சி பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. பலத்த மழையின் காரணமாக ஈரோட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுதந்திரதின கலை நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை.
தாழ்வான சாலைகளிலும், பகுதிகளிலும் வெள்ளம் போல தண்ணீர் ஓடியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னையில் இன்று காலை சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. வானம் மேக மூட்டமாகவும் சில இடங்களில் இடியும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications