பாக். வெள்ள சேதம்-லாகூரில் நிதி வசூலித்து அளித்த இந்தியர்கள்
லாகூர்: பாகிஸ்தான் வெள்ள சேத நிவாரணப் பணிகளுக்காக இந்தியர்கள் சேர்ந்து நிதிவசூல் செய்து அதை பாகிஸ்தானில் அளித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு 1700 பேர் உயிரிழந்துள்லனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கிப் போய் விட்டன.
இந்த நிலையில் பாகிஸ்தான் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது இந்தியாவைச் சேர்ந்த குழு ஒன்று. பாகிஸ்தானுக்கு அமைதிப் பயணம் என்ற பெயரில் மும்பையிலிருந்து இந்தக் குழுவினர் லாகூர் வந்தனர்.
இக்குழுவில் சந்தீப் பாண்டே, மஸர் ஹூசேன், பெரோஸ் மோதிவாலா, ஜயத் அகமது, மோனிகா வஹி, ராஜேஷ்வர் ஓஜா, பெரோஸ் ஹூட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் லாகூரில் உள்ள மால் சாலையில் நின்று நிதி வசூல் செய்தனர். பின்னர் தங்களது சொந்தப் பணத்தையும் போட்டு மொத்தம் ரூ. 30,000 நிதியை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தனர்.












Click it and Unblock the Notifications