கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-அகதி அந்தஸ்து வழங்க இலங்கை அரசு எதிர்ப்பு
டொரண்டோ: கப்பல் மூலமாக கனடாவைச் சென்றடைந்துள்ள 350 ஈழத் தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரி புகலிம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கனடா அரசு அகதிகள் அந்தஸ்தை அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசு தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
“சன் சீ" என்ற கப்பலில் 350 ஈழத் தமிழர்கள் கனடா புறப்பட்டுச் சென்றனர். அவர்களை அகதிகளாக பாவித்து உதவ கனடா அரசு முன் வந்துள்ளது. இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சித்திராவ்கனி கனடா அரசிற்கு இது தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கப்பல் மூலம் கனடா வந்துள்ளவர்களில் பலர் விடுதலைப்புலிகள் ஆவர். இந்த கூட்டத்திற்கு தலைவராக உள்ள வினோத் விடுதலைப் புலிகளின் தலைவர் ஆவார். மேலும், அவருக்கு ஆயுதகடத்தலிலும் தொடர்பு உள்ளது.
எனவே, கனடா அரசு இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கக்கூடாது என்று அவர் அதில் கூறியுள்ளார்.
ஆனால் இலங்கை அரசின் இந்த குற்றச்சாட்டை ஏற்க கனடா அரசு மறுத்துவிட்டது. கப்பலில் வந்திருப்பவர்களைப் பார்த்தால் அப்பாவிகளாக இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் அகதிகள் தான் என்று கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications