For Daily Alerts
Just In
விஜய் மல்லையாவின் இணையதளத்தை 'ஹேக்' செய்த பாகிஸ்தானியர்கள்
பாகிஸ்தான் சைபர் ஆர்மி என்ற பெயரிலான இந்த கும்பல், மல்லையா இணையதளத்தில் ஊடுறுவி, இந்திய இணையதளங்களை நரகங்களாக்கி விடுவோம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இடம் பெற செய்தனர்.
சாராய அதிபராக இருக்கும் மல்லையா, ராஜ்யசபா எம்.பியாகவும், ஐபிஎல் பெங்களூர் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். அவரது எம்.பி. இணையதளத்தில்தான் தற்போது ஊடுறுவல் நடந்துள்ளது.
இதனால் அப்செட் ஆன மல்லையா டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
மல்லையா தளத்தில் ஊடுறுவிய பாகிஸ்தான் கும்பல், இந்தியாவில் உள்ள இணையதளங்களில் ஊடுறுவி அவற்றை நாசப்படுத்துவோம். இணையதளங்களைப் பயன்படுத்தவே இந்தியர்கள் அச்சப்படும் நிலையை உருவாக்குவோம். இந்தியர்களால் பாகிஸ்தானிய இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டால் அதற்குப் பழி தீர்ப்போம் என கூறப்பட்டுள்ளது.
Story first published: Monday, August 16, 2010, 14:47 [IST]