மகாராஷ்டிரம்-அந்தமானில் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அந்தமான் தீவுகளிலும் மகாராஷ்டிர மாநிலம் தானே நகரிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.
அந்தமானி்ல் இன்று காலை 7.09 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு ஓடினர்
பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 புள்ளிகளாகப் பதிவானது.
அதே போல மகாராஷ்டிர மாநிலம் தானே நகரிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. பூமி லேசாக குலுங்கியதால் வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. அங்கு 2.6 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications