தமிழர் மறுவாழ்வு: இந்திய பிரதிநிதி அடுத்த மாதம் இலங்கை பயணம்

Subscribe to Oneindia Tamil

Nirupama Rao
சென்னை: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய இந்திய அரசின் மூத்த உறுப்பினர் அடுத்த மாதம் இலங்கை செல்வார் என்று மத்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரணம் உரிய முறையில் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அதைக் கண்காணிக்கவும் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்யவும் ஒரு பிரதிநிதியை அனுப்பலாம் என்று பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்திருந்தார்.

இதை பிரதமர் ஏற்றுக் கொண்டார். இந் நிலையில் நிருபமா ராவ் அது குறித்து விவாதிக்க சென்னை வந்து முதல்வரை சந்தித்தார்.

அப்போது ஈழத் தமிழர்கள் பிரச்சனை தவிர, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராவ், அடுத்த மாதம் இந்திய அரசின் மூத்த பிரதிநிதி இலங்கை செல்வார் என்றார்.

கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு:

இந் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தனது 48வது பிறந்த நாளையொட்டி கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

அவருக்கு கருணாநிதி சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+