For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிவுகளை நீக்கி அனைவரையும் தேவராக அறிவிக்க ஸ்ரீதர் வாண்டையார் கோரிக்கை!

By Chakra
Google Oneindia Tamil News

Sridar Vandaiyar
தூத்துக்குடி: கள்ளர், அகமுடையர் என்று பல பிரிவுகளாக இருப்போரை இணைந்து அனைவரையும் தேவர் இனம் என்று குறிப்பிட்ட வேண்டும், இதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகிறோம், வலியுறுத்துவோம்.

கள்ளர், அகமுடையர் என்று தேவர் இனம் பல பிரிவுகளாக உள்ளது. இவை எல்லாவற்றையும் இணைந்து தேவர் இனம் என்று குறிப்பிட்ட வேண்டும்.

சுதந்திர போராட்டத்தின் போது, வெள்ளையனை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் நெல்லை மாவட்டத்து நெற்கட்டும்சேவல் மன்னன் பூலித்தேவன்.

இந்த புலித்தேவனின் பிறந்த நாள் விழா விரைவில் எனது தலைமையில் நடைபெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X