For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்ட 6 அமைச்சர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இன்று மத்திய அமைச்சர்கள் ஆறு பேர் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர்.

வேக்ஸிப்ளூ எனப்படும் அந்த தடுப்பு மருந்தை அமைச்சர்கள் சிபல், திணேஷ் திரிவேதி, காந்திசெல்வன், கே.வி.தாமஸ், சி.பி. ஜோஷி மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.

டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு வந்து இந்த தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர்.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கடந்த ஜூலை 4-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் நபராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டுக் கொண்டார்.

தற்போது நாடு முழுவதும் இந்த தடுப்பு மருந்து பொதுமக்களுக்கும் போடப்படுகிறது. முக்கிய மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X