தேக்கு மரத்தை வெட்ட ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் கைது
கோவை: கோவை அருகே தேக்கு மரத்தை வெட்ட ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மதுவராயபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. விவசாயி.
இவர் தனது தோட்டத்தில் உள்ள தேக்கு மரத்தை வெட்ட முடிவு செய்தார். இதற்காக கோவையில் உள்ள போலுவாம்பட்டியில் வனச்சரகர் விஜயகுமாரை சந்தித்து அனுமதி கேட்டார்.
தேக்கு மரத்தை வெட்ட வேண்டும் என்றால், ரூ 20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வனச்சரகர் வற்புறுத்தியடுத்தை அவர் ரூ 20 ஆயிரம் கொடுத்துள்ளார். இதன் பின்பு தனக்கு மேலும் ரூ 30 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என வனச் சரகர் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப் போன ஆறுச்சாமி இந்த சம்பவம் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ஆறுமுகம் வனச்சரகர் செல்வராஜிடம் ரூ 30 ஆயிரம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications