For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில் விழாவில் போலீசாருக்கு அடி உதை-12 பேர் கைது

Google Oneindia Tamil News

உவரி: கன்னியாகுமரி மாவட்டம் உவரி அருகே கோவில் கொடைவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

உவரி அருகே உள்ள குட்டம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 16ம் தேதி தொடங்கி நேற்று 18ம் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு நாளை ஓட்டி இரவு பாட்டுக் கச்சேரி நடத்த அப்பகுதி இளைஞர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக சில நாட்களுக்கு முன்பு உவரி போலீசாரிடம் கச்சேரி நடந்த அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து பாட்டு கச்சேரிக்கு பதிலாக மிமிக்ரி நிகழ்ச்சி நடத்த இளைஞர்கள் முடிவு செய்தனர். இதற்கு போலீஸ் அனுமதி கொடுத்தனர்.

அதன்படி நேற்று இரவு மிமிக்ரி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இடையே அப்பகுதி இளைஞர்கள் சினிமா பாடல்களை போட்டு நடனமாடினர். இதனையறிந்த உவரி போலீசார் மோதல் சம்பவங்கள் நிகழாதவாறு தடுக்க நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு குடிபோதையில் நின்ற 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதபடை போலீ்ஸ்காரர் சுரேந்திரன் என்பவரிடம் நாங்கள் பாட்டு கச்சேரி நடத்த ஏன் நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்தனர்.

பின்னர் 12 பேரும் சுரேந்திரனை சரமாரியாகத் தாக்கினர். இதில் அவரது பற்கள் உடைந்தது. தொடர்ந்து தாக்கியதில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நாக மாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோரது தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். காயமடைந்த சுரேந்திரனை மீட்டு ராதாபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.

தடியடியில் பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. அங்கிரு்ந்த சேர்கள் மற்றும் டியூப்லைட்டுகள், பல்வேறு பொருட்கள் சேதமாகின. நள்ளிரவு 1 மணி அளவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ்காரர் சுரேந்திரனை தாக்கிய 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தட்டத்தை சேர்ந்த சுரேஷ், சுயம்பு ஆனந்தன், சகாயதேவன் சுயம்புராஜன், தமிழ்செல்வன், முத்துகுமார், செல்லதுரை, புஷ்பராஜ், ஆனந்தராஜ், ஆனந்தன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீஸ்காரரை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X