விருதுநகர் ஆர்.டி.ஓ.வைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) மீது நடவடிக்கை கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி ஒரு பம்ப் செட்டு அறையில் சட்ட விரோதமாக பட்டாசு திரி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோட்டாட்சியர் கொம்பையன் தலைமையில் அங்கு சென்ற குழு, பட்டாசு திரிகளை வெளியே கொண்டு வந்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இதில், ஏற்பட்ட திடீர் விபத்தில் சாத்தூர் காவல்துறை ஆய்வாளர் அப்துல் லத்தீப், விஏஓ குமாரசாமி, ஆர்.ஐ. ராஜ்மோகன் உள்பட உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை தனியார் மருத்து வமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி 8 பேரும் உயிரிழந்தனர்.
இதில், பலியானவர்களில் 4 பேர் வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 16 ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விபத்து பற்றிய விசாரணையின் போது, ஆர்.டி.ஓ. கொம்பையன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர்,
விபத்தில், உயிரிழந்த வருவாய்த்துறை ஊழியர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ 20 லட்சம் வழங்க வேண்டும் என்றும், விபத்திற்கு காரணமான ஆர்.டி.ஓ. கொம்பையனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications