ஓணம் பண்டிகை-நெல்லையில் பூக்கள் விலை உயர்வு
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்கி வருவதை ஓட்டியும், ஆவணி மாத பிறப்பு காரணமாகவும், நெல்லையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ மல்லி விலை ரூ.150 ஆக இரு்ந்தது. நேற்றைய மார்கெட் நிலவரப்படி ரூ.500 வரை விற்றது. அரளிப்பூ ரூ.50ல் இரு்ந்து 300 ஆக உயர்ந்தது. ஒரு கிலோ ரோஸ் ரூ.200க்கு விற்றது. கடந்த வாரம் ரூ.80க்கு விற்றது.
இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ சம்பங்கி பூ ரூ.250, பிச்சிபூ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் இந்த இரு பூக்களும் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டன. கேந்தி ரூ.20, கோழி கொண்டை ரூ.30 ஆகிய பூக்கள் மட்டும் ஓரளவு இயல்பான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.












Click it and Unblock the Notifications