ரம்ஜான் மாத நோன்பை கடைப்பிடிக்காத கசாப்-பகலில் நன்றாக சாப்பிடுகிறார்
Subscribe to Oneindia Tamil

மும்பைத் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் சிக்கி பிடிபட்ட ஒரே நபர் கசாப் மட்டுமே. அவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தற்போது கசாப் பலத்த பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது ரம்ஜான் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஆனால் கசாப் நோன்பு கடைப்பிடிக்கவில்லை. மாறாக பகல் நேரங்களில் பால், ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றையும், வயிற்று வலிக்காக மாத்திரைகளையும் சாப்பிட்டு வருகிறாராம்.
தனது அறையில் உருதில் எழுதப்பட்ட கதைப் புத்தகங்களை தொடர்ந்து படித்துப் பொழுதை போக்கி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications