கோடிக்கணக்கில் மோசடி செய்த 19 வயது வாலிபர் கைது: மும்பை மாபியாவுடன் தொடர்பு
திருவனந்தபுரம்: இன்டர்நெட் மூலம் பணத்தை இரட்டித்துத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். தொழில் அதிபர். இவரது மின்னஞ்சலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த மைசாப்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் ஒரு தகவல் வந்தது.
அதில் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் பணம் 2 மாதத்தில் இரட்டிப்பு செய்துத் தரப்படும் என இருந்தது. இதை நம்பி உன்னி கிருஷ்ணன் ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் இரண்டு மாதம் ஆகியும் இரட்டிப்பு தொகை கிடைக்கவில்லை. எனவே, தோப்புபடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கோழிக்கோடு தாமரைச்சேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்ற வாலிபரை கைது செய்தனர். இந்த மோசடியின் பின்னனியில் மும்பையைச் சேர்ந்த ஒரு மாபியா கும்பல் இருப்பது தெரிய வந்தது. மாபியா கும்பல் தலைவரான இந்தூரைச் சேர்ந்த ஹேமந்த் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இக்கும்பல் கேரளாவில் மட்டும் பல முக்கிய தொழில் அதிபர்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications