ரூ. 1,000 கோடி ரேசன் ஊழல்: அருணாச்சல் முன்னாள் முதல்வர் கைது
Subscribe to Oneindia Tamil
இடாநகர்: பொது விநியோகத் திட்டத்தில் நடைபெற்ற ஊழலில் தொடர்புள்ளதாக அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கெகாங் அபாங் இன்று கைது செய்யப்பட்டார்.
சிறப்புப் புலனாய்வுப் குழுவினர் அவரைக் கைது செய்தனர்.
அருணாசலப் பிரதேச பொது வினியோகத் திட்டத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, கெளஹாத்தி உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
ஆவணங்களின் அடிப்படையிலும், இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அபாங் கைது செய்யப்பட்டதாக இந்தக் குழுவின் அதிகாரியான் செளகான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications