வாணியம்பாடியில் சரக்கு ரயில் தடம் புரண்டது-ரயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி: வாணியம்பாடியில் நியூ டவுன் ரயி்ல்வே கேட் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த வழியாக வந்த சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் 5 ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
தடம்புரண்ட ரயிலை அங்கிருந்து அகற்றும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்குப் பின் 2 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு, பாதை சீர் செய்யப்பட்டது.
இதையடுத்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் தடம் புரண்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications