கருணாநிதியை விமர்சிக்க ஜெ.வுக்கு என்ன தகுதி இருக்கிறது?-அமைச்சர் வேலு
கிருஷ்ணகிரி: முதல்வர் கருணாநிதி பல காலமாக மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார். அவரை விமர்சனம் செய்ய ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது. இனியாவது அவதூறு பேச்சை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் பதவியை நான் துச்சம் என எண்ணி களத்தில் குதிப்பேன் என்று கூறியுள்ளார் தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசினார். அப்போது கூறுகையில்,
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்காக கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படுகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தால் ஏராளமான ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழக மக்களுக்காக திமுக ஆட்சியில் தொடர்ந்து பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முதல்வர் கருணாநிதி பல காலமாக மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார். அவரை விமர்சனம் செய்ய ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது. இனியாவது அவதூறு பேச்சை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் பதவியை நான் துச்சம் என எண்ணி களத்தில் குதிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications