Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோத்தபயாவைக் கொல்ல முயன்றதாக கூறி 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

Gotabaya
கொழும்பு: ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சேவைக் கொல்ல முயன்றதாக கூறி 3 பேரை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று கூறி போரை தீவிரமாக நடத்தியவர் கோத்தபயா. இவரது போர் தாக்குதல் உத்தரவுகளால் உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலிகளை விட அப்பாவித் தமிழர்களே அதிகம்.

இவரை சிங்களர்களுக்கும் கூட அவ்வளவாக பிடிக்காது. இவரைக்கொல்ல பலமுறை சதி நடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கொலைச் சதி அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரில் ஒருவர் சிங்களர், மற்ற இருவரும் தமிழர்கள். தமிழர்களில் ஒருவருடைய பெயர் பிரபாகரன், இன்னொருவர் பெயர் செல்வமோகன்.

மூன்று பேரும் சேர்ந்து கோத்தபயாவைக் கொல்ல திட்டமிட்டு மலேசியாவிலிருந்து கொழும்பு வந்துள்ளனர். 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+