ஸ்ரீரங்கம் கோவிலில் ஜெயலலிதா ரூ.2.10 லட்சம் காணிக்கை
திருச்சி: மிகக் குறுகிய காலத்தில் திருச்சி 2வது முறையாக வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
தனி விமானம் மூலம் தோழி சசிகலா, பெண் உதவியாருடன் திருச்சிக்கு நேற்று மதியம் 2.35 மணிக்கு வந்த ஜெயலலிதா கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார்.
பகல் 1.30 மணி முதல் 3 மணிவரை ராகு காலம் என்பதால் 3 மணி வரை கும்பகோணத்தான் சாலையில் காரிலேயே 15 நிமிடம் காத்திருந்தார்.
3.05 மணிக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் வழியாக உள்ள வந்த ஜெயலலிதாவை கோவில் நிர்வாகத்தினர் மாலை மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர் கார்த்திகை கோபுரம் வழியாக சென்று, கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்துவுட்டு மூலவர் சன்னதிக்குச் சென்றார்.
அங்கிருந்த உண்டியலில் காணிக்கையாக 100 ரூபாய் நோட்டுளின் 21 கட்டுக்களை (ரூ.2.10 லட்சம்) ஜெயலலிதா செலுத்தினார்.
அங்கு ஜெயலலிதாவுக்கு பட்டு வஸ்திரமும், தாயார்-பெருமாள் படமும் வழங்கப்பட்டன.
அப்போது திருப்பாவையின் 27வது பாடலான வாழ்த்துப் பாடலை பாடி, பட்டர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தினர்.
பின்னர் தாயார் சன்னதியில் ஜெயலலிதா தரிசனம் செய்தார். அங்கிருந்து நந்தவனம் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஜெயலலிதா தரிசனம் செய்தார்.
கோவிலில் சுமார் இரண்டரை மணி நேரம் தரிசனம் செய்த ஜெயலலிதா மாலை 6.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்ய
கோவிலில் நிருபர்கள் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முயன்றபோத, நான் தனிப்பட்ட முறையிலான பயணம் வந்துள்ளேன். இதனால் பேட்டியளிக்க விரும்பவில்லை என்றார்.
ஜெயலலிதாவின் வருகையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications