மக்கள் விரும்பும் வேட்பாளர் வெல்ல ஐரோப்பிய பார்முலா தான் சரி: குப்தா

கோவையில் செரி அமைப்பின் மேற்கு மண்டல மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
கடந்த சில வருடங்களாகவே தேர்தலை ஆள் பலம், பண பலம் கொண்டு பெரிய கட்சிகள் சந்திக்கத் தயராகி வருகின்றன. அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
பண பலம் கொண்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற சூழல் ஜனநாயக நாட்டில் உருவாகி வருவது வேதனை தருகிறது.
தேர்தலில் பணத்தை முதலீடாக பயன்படுத்தப்படுவதை உடனடியாகவும், முழுமையாகவும் கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் நியாயமான தேர்தல் சாத்தியமாகும்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரிய கட்சிகளால் முடக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.
இதே விதியை இந்தியாவிலும் அமலாக்கினால், பெரும்பான்மை மக்கள் விரும்பும் வேட்பாளரே தேர்தலில் வெல்ல முடியும் என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications