நிதிஷ்குமாருக்கு நல்ல சீட்-பழுதடைந்த சீட் கிடைத்ததால் விமானப் பணிப்பெண்ணுடன் மோதிய லாலு
டெல்லி: டெல்லியிலிருந்து பாட்னா செல்வதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தனது இருக்கை பழுதடைந்திருந்ததாலும், பின்னாடி இருக்கையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறட்டைவிட்டுதூங்கிக் கொண்டிருந்ததாலும் ஆத்திரமடைந்து விமானப் பணிப்பெண்ணுடன் சண்டைக்குப் போய் விட்டார்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பறப்படத் தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் வேகமாக வந்து விமானத்தில் ஏறினார்.
அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விமானப்பணிப் பெண் காட்டினார். ஆனால் அது பழுதடைந்திருந்தது. இதனால் எரிச்சலடைந்தார் லாலு. அது போதாதென்று பின் இருக்கையைப் பார்த்த லாலு, அங்கு முதல்வர் நிதீஷ் குமார் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்ததால் மேலும் கோபமடைந்தார்.
எப்படி எனக்கு இப்படி ஒரு சீட்டைக் கொடுக்கலாம், புகார் கொடுக்கட்டா என்று கூறி தனது பாணியில் கத்தினார். இதைப் பார்த்த ஏர் ஹோஸ்டஸ் பயந்து போய் விட்டார். பின்னர் இருக்கை சரி செய்யப்பட்டு அதில் லாலுவை அமர வைத்தனர்.
லாலுவின் இந்த லடாய் காரணமாக கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாமதமானது விமானம் புறப்பட.












Click it and Unblock the Notifications