புதிய தமிழகம்-மள்ளர் இயக்கத்தினர் மோதல்: 7 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி அருகே போஸ்டர் ஓட்டுவதி்ல் ஏற்பட்ட தகராறில் புதிய தமிழகம்- மள்ளர் இயக்கத்தினர் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் சின்னகுட்டி மகன் ஆறுமுகம். இவரது வீட்டு சுவற்றில் சில நாட்களுக்கு முன் மள்ளர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தனது நிறுவன தலைவர் சுப. அண்ணாமலையை வரவேற்று போஸ்டர் ஓட்டினர்.

இதை புதிய தமிழகம் கட்சியினர் எதிர்த்தனர். அவர்கள் போஸ்டர் மீது சாணத்தை வீசினர்.

இதை ஆறுமுகத்தின் தாய் பண்டாரத்தி கண்டித்தார். இதையடுத்து பண்டாரத்தியை அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் தென்காசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்கிக் கொண்டனர்.

சம்பவம் அறிந்த வடகரை சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலிகான் விசாரணை நடத்தி புதிய தமிழகத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துராஜ், பால்துரை, பண்டாரம், மள்ளர் இயக்கத்தை சேர்ந்த மாரியப்பன், சாமி, அவரது தம்பி ஆறுமுகம் ஆகியோரையும் கைது செய்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+