அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
நெல்லை: பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 17 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மருந்தாளுனர்கள், லேப் டெக்னிஷியன் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சில மாதங்களாக பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணிமுத்தாறு சிறப்பு காவல்படை எஸ்பி அங்கமுத்து, மகன் துரைராஜ் உள்பட பலர் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தவிர கிராமபுறங்களை சேர்ந்த பலர் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிகிக்சை அளிக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் தடு்ப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனர் சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications