கூர்க்கா ரெஜிமென்ட்க்கு குட்பை சொல்கிறது இங்கிலாந்து
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து ராணுவத்தில் கடந்த 200 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த படைப் பிரிவுதான் கூர்க்கா ரெஜிமென்ட். தற்போது இந்தப் பிரிவை கலைத்து விட இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படைப் பிரிவை பராமரிக்க நிதிப் பற்றாக்குறை பெரும் தடையாக இருப்பதால் இதை கலைத்து விடும் முடிவுக்கு வந்துள்ளது இங்கிலாந்து அரசு. கூர்க்கா படைப் பிரிவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை செயாலளர் லியாம் பாக்ஸ் கோரியிருந்தார். ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று நிதித்துறை கூறி விட்டது. இதையடுத்து கூர்க்கா பிரிவுக்கு ஆபத்து வந்துள்ளது.
கடந்த ஆண்டு கூர்க்கா படைப்பிரிவை தொடர் வேண்டும் என்று கோரி நடிகை ஜோனா லும்லே பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கூர்க்கா படைப்பிரிவில் தற்போது 3640 பேர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications