தொடரும் வன்முறையால் தடுமாறும் காஷ்மீர் 'பேட்' தயாரிப்பு தொழில்

Subscribe to Oneindia Tamil

Kashmir Bat Maker
ஸ்ரீநகர்: தொடர்ந்து வன்முறை தலைவிரித்தாடி வருவதால், காஷ்மீரில் கிரிக்கெட் பேட் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்னும் வன்முறை ஓயவில்லை. துப்பாக்கிச் சத்தமும், தொடர் ஊரடங்கும் பள்ளத்தாக்கை ரணகளமாக்கியுள்ளது. இதனால் அங்கு புகழ் பெற்ற கிரிக்கெட் பேட் தயாரிப்புத் தொழில் முடங்கியுள்ளது.

காஷ்மீர் பேட் தயாரிப்புத் தொழில் மூலம் ரூ.30 கோடி அளவுக்கு வருமானம் புழங்குகிறது. இங்கிலாந்தின் வில்லோ பேட்களுக்குப் காஷ்மீர் பேட்கள்தான் சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு காஷ்மீரில் உள்ள சார்சூ, ஹலமுல்லஹா, பிஜ்பேஹரா, சங்கம், சேதார், புஜ்டெங், மிர்ஸாபூர் ஆஐகிய பகுதிகளில்தான் பேட் தயாரிப்பு தொழில் பிரபலம். இங்கு பாதுகாப்புப் படையினரின் தொடர் நடமாட்டம் காரணமாக பேட் தயாரிப்புத் தொழில் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

இந்தப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேட்கள் தயாரிக்கப்படுகின்றன. கைப்பிடி இல்லாத பேட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் குவிந்து கிடக்கின்றன. அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எங்களது வாழ்க்கையே அழிந்து கொண்டிருக்கிறது. தொடர் பயத்திலும், விரக்தியிலும் நாங்கள் நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்று பேட் தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+